Friday, August 10, 2018

ஆதாம் ஏவாள்


கனி ஒன்றால் கல்லடி பட்ட இதயமிரண்டு
காதல் செய்ய கற்று கொண்டதது
ஏடன் தோட்டத்தில்!

படைத்தவன் அவனே விதிமிரலை நினைவூட்டி
அவர்கள் காதலுக்கு வித்திட்டான்!

உடலோ உடைத்தேட
உணர்வோ உள்தேட
விரல்களே விடை அறிந்தது

உணர்வோ உயிர்பெற்றது
உயிரோ உருபெற்றது
உலகம் மொழிக் கற்றது

பயம் பக்தியானது
பழக்கம் பாரம்பரியமானது

அறிவோ அனுபவம் பெற்றது
அறிவியலோ ஆராய கற்றது

விடையறியா கேள்விக்கு
கடவுள் என்ற மருவிடை மேலிடபட்டது.

No comments:

Post a Comment