Friday, August 10, 2018

அயன்

காற்றுக்கு கால் முளைத்து
 காலிடறி புல் தடுங்கி விழந்து
பின் மூன்று காலால் முந்திக்கொண்டு ஓடி
நூல் பிடித்து ஊசியின் வாலில் பறந்து
வண்ணவனின் வானவில் மெத்தையில் குதித்து
மெல்லிய மிதியில் நடந்து
கூடிய இதழில் குடி புகுந்து கண் உறங்கயிலே
கனாவிலே அச்சுண்டு
கருமையிலே பின் விழிந்து 
இருள் நீங்க ஒளி ஏந்தி வந்த தோழமைக்கு தோள் இசைந்து 
விடியலுக்கு காத்திருந்து
அரைக்கூவலில் அலுப்பை நீக்கி
விண்ணின் துளியில் உடல் ஈரமாக
தீயின் புதல்வனின் தீண்டலில் நீர் உலர்ந்தி
பறந்த இலவும் உடுத்தி
நறுமனத்தை நாசியுண்டு
பின் நானிறக்க தூனைப் பற்றி
பச்சைப் படுக்கையிலே தரையிறங்கி
மச்சம் துள்ளக்கண்டு
நாவிலே எச்சம் கொண்டவனின் நட்பை நாடி
கறை சேர்ந்து ஊர் போனேன் நீள வண்டியின் படுக்கையிலே

No comments:

Post a Comment