Thursday, July 7, 2011

மாறுங்க

கண்களே தொடக்கமாய், 
கனவுகளோ நெருக்கமாய்!  
சொல்ல முடியாத உணர்வு,
தொல்லை செய்யும் நினைவு!

எளிதில் வசப்படும் ஆணின் மனம்,
அவனை முழுமையாய் அறிய சொல்லும் பெண்ணின் குணம்!

பொறுமையில்லாமல் புண்பட்டு,
புறகணிங்க துடிப்பான்,
பின் கண்ணீரோடு கெஞ்சுவான்!

இறங்காது அவள் மனம்,
மனதை இருக்கமாய் வைப்பதே அவள் பலம்!

முழுதாய் போராடுபவனை உதர செய்வாள்,
முன்னுக்குப்பின்  முரணானவனையே அடைய துடிப்பாள்!

புரிந்துக்கொள்ள முடியாதவள் பெண்மை,
இதில் சில ஆண்களும் இருப்பது  உண்மை!

இவர்களுக்கு எதிரி உறவுகளில்லை,
அதிலும் சில முரண்பாட்டு தொல்லை!

இந்த இடர்பாட்டுக்குள் உடைப்படும்,
காதல்கள்தான் எத்தனை?

முதலில் தோன்றும் எதுவுமே உன்னதமானது,
என்று நினைத்து கொள்வதே இதன் கோளாறு!

தேடல் எனபது வாழ்கைக்கு மட்டுமல்ல,
நல்ல  மனதிற்கும்தான்!
காதலில் உலகமில்லை,
காதலில்லாமலும் உலகமில்லை!

---கோபிஜி